Tuesday, January 1, 2013

தமிழ் வழி கல்வியின் ஆழம்

இரு தினங்களுக்கு முன்னால் என் நண்பர் அன்பழகினடம் தற்செயலாக இயற்பியலில்(Physics ) படித்த Lever and Pulleys பற்றி கேட்டேன் , அவர் தமிழ் கல்வி வழி பாடம் பயின்றவர் , "நெம்பு கோல்" என்ற ஓரிரு  வார்த்தையில் முதல் வகை Lever பற்றி நச்சென்று கூறிவிட்டார் ....

இந்த கேள்வியை என்னிடம் முன்றாம் வகுப்பு மாணவி கேட்ட பொழுது உடனடியாக தோன்றவில்லை ... காரணம் இரண்டாக இருந்தது

1. ஞாபகம் இன்மை [வந்தது உதாரணம் தெரிந்த பின் ]
2. ஆங்கில வழி கல்வி  (என் வீட்டில் தமிழில் தான் பேசுவோம் , புரிந்து கொண்டிருபிர்கள் )


என்னை பொறுத்தவரை பேச்சு மொழி எதுவோ அதுவே கல்வி வழியாக இருக்கவேண்டும் . தமிழனுக்கு ஆங்கிலம் மிக அவசியம் தான் வணிக மொழியாக, வாழ்கை மொழியாக அல்ல .
 

முதல் வாசகம்

என்ன  தமிழில் எழுதுவது என்று சிந்திதிது சிந்த்தித்து மனம் மிகவும் குழப்பம் அடைந்து , ஒரு சமையத்தில்  சரி எழுத்வதர்க்கு  முன்னரே  எழுதுவதை  துறந்து விட தோன்றியது ..... விடுவேனா ? மாட்டேன் ... மனதை தளரவிட கூடாது என்ற எண்ணம் மேலோங்கி நின்றது "மரத்தை தாங்கும் வேர் போல" ...

ஏன்  அப்படி ?
1. தமிழ் மிதானா ஆர்வம் .
2. ஆர்வம் மட்டும் போதுமா ,  அதற்கான ஞானம் ... தமிழ் ஞானம் மிக குறைவு என்னிடம்... எழுத  தொடுங்கு , தானாக தமிழ்  ஞானம் வளரும்  என்ற என் மன குரல் எதிரொலியும் காரணம்.
3. என்  அனுபவங்களின்  பதிவாகவும் இருக்கவேண்டும்.
4.  கொஞ்சம் விமர்சினதிர்ககவும் .. மனிதன் தானே

எதை எழுதுவது ?
வரைமுறை  படுத்தவில்லை . அப்படி வரைமுறை வகுத்து எழுதவேண்டும் என்பது என்  தொலைநோக்கு ஆசை. அதற்க்கான நேரமும் ஞானமும்   கூடும் பொழுது , அதன் பதிவு கட்டாயம் இங்கிருந்து தான் அரங்கேறும் ....

தேதி அறியேன் என்னுடைய இரண்டாவுது பதிவிற்கு ... வாரத்திற்கு ஒரு மணி நேரமாவது இதற்காக  ஒதுக்கவேண்டும் என்ற தீர் மானம் ....