Tuesday, February 18, 2020

பாட்டன் பாரதி கண்ட கனவு

  பாட்டன் பாரதி சொன்னது
     ஏட்டிற்கு மட்டுமே பாப்பா
  சாதி களையவில்லை விண்ணென
     மேலோங்கி நிற்கிறது பாப்பா
  சான்றோன் அன்று
      சான்றோனிடத்தும் மய்யமது பாப்பா
  சுயசிந்தனை சுருங்கி சமநீதி
      தத்துவம் மட்டுமே பாப்பா

  சமநீதி கொள்கை மனதில்
    ஊற்றென பெறுக வை பாப்பா
  மரபணுக்கள் அற விதைகளை
     திணித்து விடு பாப்பா
  வரும் சந்ததி பேதைமையை
     அறவே களைந்து விடும் பாப்பா
  சாதிகள் களைத்து விடு 
     பாட்டன் பாரதி கண்ட கனவை கனவு 
  நிலைக்க வித்திடு பாப்பா

No comments:

Post a Comment